.

Saturday, September 1, 2007

அறிவியல் இன்று - 01/09/2007

நாஸாவால் மறுதளிக்கப்பட்ட ரஷ்யா,நிலவில் தனியாக தளம் அமைக்க முடிவு
----------------------------------------------------------------------------------------
2025-ஆம் ஆண்டில் நிலவுக்கு மனிதனை அனுப்பும் தொழில்நுட்பத்தை ரஷ்யா பெற்றுவிடும் என்று அந்த நாட்டின் வின்வெளி கழகத்தின் தலைவர் அணாடோலி பெர்மினோவ் (Anatoly Perminov) கூறியிருக்கிறார்.
அதனை தொடர்ந்து 2027-2032-க்குள் நிலவில் விண்வெளி வீரர்கள் சென்று இருக்கும்படியான தளம் அமைக்கவும் திட்டங்கள் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூட்டாக நிலவு ஆராய்ச்சியில் ஈடுபட நாஸா (NASA) நிறுவனத்தை அனுகியதாகவும்,ஆனால் அந்த யோசனையை நாஸா நிராகரித்து விட்டதாக அவர் தெரிவித்தார்.
சீனா,ஜப்பான்,இந்தியா போன்ற மற்ற நாடுகளும் நிலவு ஆராய்ச்சியில் ஆர்வம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தி பற்றிய இணையப்பக்கம் இங்கே

தட்பவெட்ப மாறுதல்களால் உணவுப்பற்றாக்குறை ஏற்படும்,ஐ.நா விஞ்ஞானி கருத்து.
-------------------------------------------------------------------------------------
-----
உலகில் மாறி வரும் தட்பவெட்ப நிலையினால் உணவு உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டு உணவுப்பற்றாகுறை ஏற்படலாம் என்று ஐநா சபையின் வானிலை பிரிவின் மூத்த விஞ்ஞானி எம்.வி.கே.சிவகுமார் தெரிவித்தார்.
இன்றைய நிலையில் 6.3 பில்லியன் மனிதருக்கு உலகின் 11 விழுக்காடு உள்ள விலைநிலங்களின் மூலம் உணவு உற்பத்தி செய்து வருகிறோம்,2020-இல் உலகத்தின் மக்கட்தொகை 8.3 பில்லியன் ஆகும்போது இப்பொழுதிருப்பதை விட குறைந்த விலைநிலங்கள் கொண்டு எப்படி உணவளிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார்.
விலைநிலங்களில் உப்புத்தன்மை அதிமாவதும்,நிலங்கள் பாலைவனங்களாக மாறுவதும் ஏற்கெனவே நடந்து வருவதாகவும் ,இன்னும் 10 ஆண்டுகளில் இதன் பாதிப்பை உணர ஆரம்பிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.


ஆதாரம்:
http://www.cbc.ca/technology/story/2007/08/31/science-russia-moon.html
http://www.reuters.com/article/scienceNews/idUSL3191845020070831

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...