.

Monday, April 16, 2007

சிகரெட் விலை உயர்வு-"ஊதுவோர்" டென்ஷன் !

பட்ஜெட்டில் சிகரெட் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால், சிகரெட் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் புகை பிடிப்போர் தடுமாற்றம் அடைந்துள்ளனர். 2007-2008 க்கான மத்திய பொது பட்ஜெட்டில் புகையிலை தொடர்பான பொருட்கள், பீடி, சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு 5% கூடுதல் வரி விதிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து சிகரெட்டுகளின் விலையையும் அதன் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. வில்ஸ் சிகரெட்டின் விலை நேற்று முதல் திடீரென உயர்த்தப்பட்டது. ரூ.3க்கு விற்கப்பட்ட ஒரு சிகிரெட்டின் விலை இப்போது ரூ. 3.50க்கு விற்கப்படுகிறது. முன்னதாக ஒரு பாக்கெட் வில்ஸ் சிகரெட்டின் விலை ரூ. 33 ஆக இருந்தது. இப்போது ரூ. 34 ஆக விற்கப்படுகிறது. இதேபோல, கிங்ஸ் சிகரெட்டின் விலை ரூ. 3.50லிருந்து ரூ. 4 ஆக அதிகரித்துள்ளது. கத்திரி சிகரெட் உள்ளிட்டவற்றின் விலையும் அதிகரித்துள்ளால் புகை பிடிப்போர் டென்ஷனாகி உள்ளனர்.

நன்றி : தட்ஸ் தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...