இந்தியாவில் வேளாண் துறையை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அடிப்படையில் உருமாற்றுவதற்கு உலக வங்கி 200 மில்லியன் டாலர் கடனுதவி அளிக்க உள்ளது. உலக வங்கியின் மேம்பாட்டு அமைப்பான சர்வதேச மேம்பாட்டு சங்கத்தின் மூலம் இந்த கடன் வழங்கப்படுவதாகவும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சில் 50 மில்லியன் டாலர் அளிக்கவிருப்பதாகவும் உலக வங்கி வெளியிட்ட தகவல் தெரிவிக்கிறது.
இந்திய வேளாண் துறையை குறிப்பிடத்தக்க அளவுக்கு மாற்றுவதற்கும், குறைந்தபட்ச தன்னிறைவை அத்துறை எட்டுவதற்கும் இந்த கடனுதவி வழிவகை செய்யும். வறுமை ஒழிப்பு, வருவாயைப் பெருக்குதல் போன்றவற்றையும் செயல்படுத்த இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இத்திட்டம் கடந்த ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அடுத்த 6 ஆண்டுகள் வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வேளாண் துறை வளர்ச்சி விகிதம் கவலையளிக்கக் கூடிய வகையில் உள்ளதாகவும் போதிய அளவுக்கு இல்லை என்றும் கார்ட்டர் கூறினார்.
MSN INDIA
Friday, April 13, 2007
இந்திய வேளாண் துறையை மேம்படுத்த உலகவங்கி நிதியுதவி
Labels:
பொருளாதாரம்,
விவசாயம்
Posted by
Boston Bala
at
1:07 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment