.

Wednesday, April 25, 2007

அணை விவகாரம்: தெலுங்கானா பகுதியில் பந்த்

அணை கட்டும் விவகாரத்தில் மகாராஷ்டிரா அரசின் போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்த தெலுங்கானா பந்த், 21 காலை துவங்கியது. இதையொட்டி அடிலாபாத், நிஸாமாபாத், கரீம் நகர், வாரங்கல் மற்றும் நல்கொண்டா ஆகிய ஐந்து தெலுங்கானா மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பஸ் உள்ளிட்ட வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தன. பள்ளி, கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டு, சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. கோதாவரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட்டுவதற்கு மகாராஷ்டிரா அரசு திட்டமிட்டுள்ளது. இதனால் நந்தத் மாவட்டத்திற்கு தேவையான 2.7 டிஎம்சி குடிநீர் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என்று ஆந்திரா கூறி வருகிறது.

மகாராஷ்டிர அரசின் இந்த போக்கைக் கண்டித்து தெலுங்கானா பகுதிகளீல் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி இந்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது.

MSN

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...