.

Wednesday, April 25, 2007

புதைகுழியில் விழுந்த 2 சிறுவர்கள் சாவு

திருச்செங்கோடு, ஏப். 25: திருச்செங்கோட்டில் பாழடைந்த குளத்தில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் புதைகுழியில் விழுந்து உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையைச் சேர்ந்தவர் செல்வம் (35). இவரது மகன் ஸ்ரீநாத் (7) இங்குள்ள பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தார். செல்வத்தின் உறவினர் மகன் கோகுல் (6).

கோகுலும், ஸ்ரீநாத்தும் வீட்டிற்கு அருகில் உள்ள பாழடைந்த குளத்தில் திங்கள்கிழமை தாவிக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது தவறி அங்கிருந்த புதை குழியில் இருவரும் விழுந்து விட்டனர். அதில் மூச்சுத் திணறி இருவரும் உயிரிழந்தனர்.

சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் ஒரு பள்ளி இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...