.

Wednesday, April 11, 2007

ச: பாகிஸ்தான் திரும்புகிறார் பெனாசீர்

பாகிஸ்தானில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ள போதிலும், தாம் நாடு திரும்ப போவதாக பெனாசீர் புட்டோ தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான புட்டோ, தற்போது லண்டனில் தங்கி உள்ளார்.தனது சுயசரிதையை ஏற்கனவே எழுதி புத்தகமாக வெளியிட்டுள்ள பெனாசீர், அந்த புத்தகத்தில் சில பகுதிகளை கூடுதலாக எழுதி அதன் மறுபதிப்பை வெளியிட்டுள்ளார்.

அதில் மேற்கண்ட தகவலை எழுதியுள்ள அவர், பாகிஸ்தானில் இறங்கிய உடனேயே தாம் கைது செய்யப்படவோ அல்லது படுகொலை செய்யப்படவோ வாய்ப்புள்ளது என்பதை தாம் உணர்ந்துள்ளபோதிலும், பாகிஸ்தானில் ஜனநாயகத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் மக்களுடன் தாம் இணைந்து செயல்பட விரும்புவதாக கூறியுள்ளார்.

"Yahoo-Tamil"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...