.

Monday, April 30, 2007

"மே தினம்" தலைவர்கள் வாழ்த்து.

மே தினம்' என்றழைக்கப்படும் தொழிலாளர் தினம் நாளை கொண்டாடப்பட இருப்பதையொட்டி தமிழக முதல்வர் கருணாநிதி உள்பட பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி வெளியிட்டுள்ள மே தின வாழ்த்துச் செய்தியில், தொழிலாளர்களுக்கு தடையின்றி தாராளமாக போனஸ், ஊக்கத் தொகை, நிலமற்ற ஏழை விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இலவச நிலம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி, திமுக அரசு தொழிலாளர் நலம் பெற தொடர்ந்து பாடுபட்டு வருவதை சுட்டிக்காட்ட விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில், உரிமைகள் மறுக்கப்பட்டு அதன் பயன் ஒரு சிலருக்கு மட்டுமே உடைமையாக்கப்பட்டபோது, அடங்கி ஒடுங்கிக் கிடந்த தொழிலாளர்கள் ஆர்ப்பரித்து எழுந்து தங்கள் உரிமையை பெற்ற நாள் என்று மே தினத்தைக் குறிப்பிட்டுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், மே தின நன்னாளில் அனைவருக்கும் வேலை கிடைக்கவும், கண்ணியமான வாழ்வு அமையவும் புதியதோர் சமுதாயம் அமைவதற்கு சூளுரை மேற்கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...