.

Saturday, April 28, 2007

வீரப்பன் உளவாளி கொலை வழக்கு நக்கீரன் கோபால் விடுதலை.

2007 கோபிச்செட்டிப்பாளையம் வீரப்பனுக்கு உணவு உள்ளிட்டவற்றை சப்ளை செய்து வந்த ஹோட்டல் அதிபர் கந்தவேல் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த நக்கீரன் ஆசிரியர் கோபால், நிருபர்கள் சிவசுப்ரமணியம், ஜீவா தங்கவேல் உள்ளிட்ட 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பர்கூரில் ஹோட்டல் வைத்திருந்தவர் கந்தவேல். இவர் வீரப்பனுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்டவற்றைக் கொடுத்து வந்தார். மேலும் வீரப்பனின் உளவாளியாகவும் இருந்தார். இவரை சிலர் கொலை செய்து விட்டனர். இதையடுத்து கடந்த அதிமுக ஆட்சியில் நக்கீரன் கோபால், நக்கீரன் நிருபர்கள் சிவசுப்ரமணியம், ஜீவா தங்கவேல் உள்ளிட்ட11 பேர் மீது கொலை வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கு கோபிச்செட்டிப்பாளையம் விரைவு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. கோபால் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டு சரிவர நிரூபிக்கப்படவில்லை என்பதால் அனைவரையும் விடுதலை செய்வதாக நீதிபதி பிரேம்குமார் தனது தீர்ப்பில் தெரிவித்தார். தீர்ப்பை அறிவதற்காக கோபி நீதிமன்றத்திற்கு வந்திருந்த கோபால் தீர்ப்பு குறித்து கூறுகையில், இது பொய் வழக்கு என்பது அனைவருக்கும் தெரியும். இந்த வழக்கால் நானும், எனது பத்திரிக்கை நிருபர்களும் கடந்த ஆட்சியில் அலைக்கழிக்கப்பட்டோம், துன்புறுத்தப்பட்டோம். இப்போது பெரும் சட்டப் போராட்டத்துக்குப் பின்னர் நிரபராதிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளோம் என்றார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...