.

Thursday, June 28, 2007

இந்திய அணியில் மேலும் ஒரு புதிய வீரர்

இந்திய வீரர்கள் பலர் உடல்நலம் குன்றியுள்ளதால் அவர்களுக்கு பதிலாக அணியில் விளையாடுவதற்காக மேலும் ஒரு புதிய வீரர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அயர்லாந்து லீக் போட்டிகளில் விளையாடிவரும் அர்ஜுன் யாதவுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சிவ்லால் யாதவின் மகன் இவர்.

கடந்த ரஞ்சிப் போட்டியின்போது ஹைதராபாத் அணியின் கேப்டனாக இருந்தவர் அர்ஜுன் யாதவ். இதுவரை 47 ஒருதினப் போட்டிகளில் 829 ரன்களை அடித்துள்ளார். மேலும் 6 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தில்லியைச் சேர்ந்த இஷாந்த் சர்மா, மேற்கு வங்கத்தின் ரணதேவ் போஸ், ராகேஷ் பட்டேல் ஆகிய மூவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...