.

Thursday, June 28, 2007

அணு உலைகளை மூட வடகொரியா சம்மதிக்கிறது.

அணு உலைகளை மூடுவதற்கு வடகொரியா சம்மதித்து உள்ளது. அப்படி மூடப்பட்டதை பார்வையிடுவதற்கு சர்வதேச அணு சக்தி ஏஜென்சி அதிகாரிகளுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்றும் வடகொரியா தெரிவித்து உள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

வடகொரியா ஒரு கம்ïனிஸ்டு நாடு ஆகும். அது அணு ஆயுத சோதனை நடத்தியதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடையை ஐ.நா.சபை விதித்தது.

அதன் பிறகு பேச்சுவார்த்தைக்கு அந்த நாடு முன்வந்தது. இந்த பேச்சுவார்த்தையில் அணு ஆயுதத் திட்டத்தை வடகொரியா கை விட்டால், அதற்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று உடன்பாடு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அணு உலைகளை மூடுவதற்கு வடகொரியா சம்மதித்தது.

பொருளாதாரத்தடை விதிக்கப்பட்டு இருந்த போது, வடகொரியாவின் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கி முதலீடு முடக்கப்பட்டது. உடன்பாடு ஏற்பட்டதும், அந்த முதலீடு புழக்கத்துக்கு விடுவதற்கு அனுமதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, அணு ஆயுத திட்டம் கைவிடப்பட்ட ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.

அணு உலைகளை மூடுவதற்கு காலவரையரை எதையும் வடகொரியா அறிவிக்கவில்லை. கடந்த வாரம் வடகொரியா சென்று வந்த அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஹில் இன்னும் 3 வாரங்களில் அணு உலைகள் மூடப்படும் என்று அறிவித்தார்.

இதற்கிடையில் அந்த நாட்டுக்கு சென்று திரும்பிய ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர் ஹிïபர்ட் பிர்கர் கூறுகையில், வடகொரிய அதிகாரிகளை நான் சந்தித்து பேசினேன். அவர்கள், அணு உலைகளை மூடுவதில் உறுதியாக இருக்கிறார்கள். அடுத்த மாதம் (ஜுலை) நாங்கள் உலைகளை மூடிவிடுவோம் என்று தெரிவித்தனர்.

அணு உலைகளை மூடுவதை பார்வையிடுவதற்கு சர்வதேச அணுசக்தி ஏஜென்சி அதிகாரிகளை அனுமதிக்கவும் வடகொரியா சம்மதித்து உள்ளது.

அந்த ஏஜென்சியை சேர்ந்த ஒலிஹெய்னன் தலைமையில் ஒரு குழு ஏற்கனவே வடகொரியா சென்று அடைந்து உள்ளது. கடந்த ஆண்டு முதல் அணு ஆயுத சோதனை நடத்திய யோங்க்பியோன் நகரில் உள்ள உலைக்கூடத்துக்கு சர்வதேச அணுசக்தி ஏஜென்சி அதிகாரிகள் குழு வியாழக்கிழமை செல்ல இருக்கிறது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...