.

Thursday, June 28, 2007

பள்ளி ஆசிரியரை தற்கொலைக்குத் தூண்டினாரா பிரதீபாவின் கணவர்

பள்ளி ஆசிரியர் ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டியதாக குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் வேட்பாளரான பிரதிபா பாட்டீலின் கணவர் தேவிசிங் ராம்சிங் ஷெகாவத் மீதான வழக்கு விசாரணை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஷெகாவத் மீதான புகார் மீது கிரிமினல் வழக்கு தொடருமாறு போலீஸôருக்கு மகாராஷ்டிரம் புல்தானா மாவட்டம் ஜல்கான்-ஜாமோத் குற்றவியல் முதன்மை மாஜிஸ்திரேட் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, கிரிமினல் வழக்குத் தொடர்வதற்குத் தடை விதிக்குமாறு கோரி உயர் நீதிமன்றத்தில் ஷெகாவத் மனுத் தாக்கல் செய்திருந்தார். மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி, ஷெகாவத் மற்றும் 3 பேர் மீதும் கிரிமினல் வழக்குத் தொடர கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தடை விதித்தார்.

உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை வியாழக்கிழமை வந்தது. விசாரணையை ஜூலை 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி ஏ.பி. லாவண்டே.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...