.

Thursday, June 28, 2007

பெண் டி.எஸ்.பி; ஆண் எஸ்.ஐ - புகாருடன் மனைவி

இதுபற்றிய தினத்தந்தி செய்தி பின்வருமாறு:

பெண் போலீஸ் துணை சூப்பிரண்டுடன் தனது கணவர் கள்ளக்காதல் வைத்துள்ளதாக சப்-இன்ஸ்பெக்டரின் மனைவி உசிலம்பட்டி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கூறியுள்ளார்.


மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கொக்குளத்தை சேர்ந்த பரமேஸ்வரி என்பவருக்கும் திருமங்கலத்தை சேர்ந்த வைரவன் மகன் மோகன் (வயது 46) என்பவருக்கும் கடந்த 1990 ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளன. திருமணத்தின்போது மோகன் போலீசாக வேலைபார்த்தார். கடந்த 1998 ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக தேர்வாகி விழுப்புரத்தில் பணியில் சேர்ந்தார். அதை தொடர்ந்து அவர் குடும்பத்துடன் விழுப்புரத்தில் வசித்துவந்தார்.

இந்தநிலையில் விழுப்புரத்தில் புதிதாக பதவி ஏற்ற பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு உமையாள் என்பருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இவர்கள் கள்ளக்காதல் விவகாரம் திருமண அளவிற்கு போய்விட்டது. இந்தநிலையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மதுரை கீரைத்துறை போலீஸ்நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சப்-இன்ஸ்பெக்டர் மோகன் விபத்தில் காயமடைந்து தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. அவரை பார்க்க விழுப்புரத்தில் இருந்து பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு உமையாள் மதுரை வந்துள்ளார். இதை அறிந்த பரமேஸ்வரி கோபமடைந்து மோகனிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றியநிலையில் பரமேஸ்வரி கோபித்துக்கொண்டு கொக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மோகன் தனது மனைவி பரமேஸ்வரியை என்னுடன் சேர்ந்து வாழ வேண்டுமானால் எனக்கு உள்ள கடனை அடைக்க ரூ.12 லட்சம் வரதட்சணையாக உனது பெற்றோரிடம் வாங்கி வரவேண்டும் இல்லாவிட்டால் விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போட்டுக்கொடுக்க வேண்டும். இந்த இரண்டு கண்டிசனுக்கும் ஒத்துவரவில்லை என்றால் உன்னை துப்பாக்கியால் சுட்டு விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

இது குறித்து பரமேஸ்வரி உசிலம்பட்டி அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

எனது கணவர் மோகன் அவருடைய கள்ளக்காதலி பெண் போலீஸ் துணை சூப்பிரண்டு உமையாள் தூண்டுதலின்பேரில் என்னிடம் ரூ.12 லட்சம் வரதட்சணை கேட்டதுடன் என்னை கொலை செய்துவிடுவேன் என மிரட்டினார். மேலும் விவாகரத்து பத்திரத்திலும் கையெழுத்து போட கட்டாயப்படுத்தி துப்பாக்கியை காட்டி மிரட்டுகிறார். அதற்கு உடந்தையாக அவரது குடும்பத்திருனரும் உள்ளனர்.

இவ்வாறு அவர் தனது புகாரில் கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன், அவருடைய தந்தை வைரவன், தாயார் அன்னக்கொடி, தம்பி பிரபாகரன், அவருடைய மனைவி அமுதா, தங்கை லதாதேவி, அவருடைய கணவர் விஜயன் ஆகிய 8 பேர் மீது மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயநாச்சியார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

தற்போது பெண்போலீஸ் துணை சூப்பிரண்டு உமையாள் விருதுநகரில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...