.

Thursday, June 28, 2007

மதுரை மேற்கு: நாளை வாக்கு எண்ணிக்கை.

மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவு நேற்று முன்தினம் நடந்தது. கே.எஸ்.கே. ராஜேந்திரன் (காங்கிரஸ்), செல்லூர் ராஜு (அ.தி.மு.க.), சிவமுத்துக்குமரன் (தே.மு.தி.க.), சசிராமன் (பாரதீய ஜனதா), சிற்றரசு (புதிய தமிழகம்) மற்றும் 23 சுயேட்சைகள் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1,56,182 பேர். வாக்குப்பதிவுக்காக 216 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 75.34 சதவீத வாக்குகள் பதிவானது. மொத்தம் 1,17,666 பேர் தங்கள் ஓட்டுக்களை பதிவு செய்தனர். இவர்களில் ஆண்கள் 58,329, பெண்கள் 59,337.

கடந்த தேர்தலில் 70 சதவீதம் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. இந்த முறை கூடுதலாக 5 சதவீத ஓட்டுக்கள் பதிவாகி இருக்கிறது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் அந்தந்த வாக்குச்சாவடிகளில் உள்ள மின்னணு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டன. பின்னர் துணை ராணுவ பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் இடமான மதுரை மருத்துவக்கல்லூரி வளாகத்திலுள்ள கட்டிடத்திற்கு கொண்டு வரப்பட்டன. அவை அனைத்தும் அங்குள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு, கதவைப் பூட்டி சீல் வைக்கப்பட்டது. அந்த அறை முன்பு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரவு, பகலாக அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓட்டு எண்ணும் அரங்கத்தில் 16 மேஜைகள் போடப்பட்டு 14 சுற்றுகளாக ஓட்டுக்கள் எண்ணப்படுகின்றன. அங்கு வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் ஓட்டு எண்ணிக்கையை பார்வையிடுவதற்காக சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு கம்பி வலை கட்டப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பகல் 1 மணிக்குள் தேர்தல் முடிவு முழுமையாக அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...