.

Thursday, June 28, 2007

நாகூர் கந்தூரி விழா: திரளானோர் பங்கேற்பு

நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நாகூர் தர்காவின் 450-ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10-ம் நாள் நிகழ்ச்சியாக நாகையிலிருந்து நாகூருக்கு சந்தனக்கூடு ஊர்வலம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

'தாபூத்து' எனப்படும் சந்தனக்கூட்டில் சந்தனக்குடம் ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. செவ்வாய்க்கிழமை சந்தனக்குடம் தர்காவினுள் எடுத்துச் செல்லப்பட்டது. தொடர்ந்து தர்கா பரம்பரை கலீபா கே.முஹம்மது கலீபா, புனித ரவுலா ஷரீப் மீது சந்தனம் பூசினார். இதைத் தொடர்ந்து 'சாதரா' எனப்படும் மல்லிகைப் பூச்சரங்களால் ஆன பட்டுத் துணியைப் போர்த்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி நாகை மாவட்டத்துக்கு செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...