.

Wednesday, June 27, 2007

சென்னையில் மீண்டும் ரவுடி வேட்டை: 100 பேர் கைது

சென்னை நகரில் கடத்தல், வழிப்பறி, கலாட்டா, திருட்டு ஆகிய குற்றங்களை தடுக்கும் பொருட்டு ரவுடிகள், பழைய குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் சென்னை நகர் முழுவதும் போலீசார் ரவுடிகளை தேடி அதிரடி வேட்டையில் இறங்கினர். தொடர்ந்து ரவுடிகளை தேடிக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது 1000க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகும் திருட்டு சம்பவங்கள் நடைபெற்றதை தொடர்ந்து வாரண்டு பிறப்பிக்கப்பட்டு பிடிபடாமல் இருக்கும் தலைமறைவு குற்றவாளிகளின் பட்டியலை அந்தந்த பகுதி போலீசார் தயாரித்து அவர்களை தேடி கண்டு பிடிக்குமாறு கமிஷனர் லத்திகாசரண் மீண்டும் உத்தரவிட்டார்.

இதையடுத்து தலை மறைவு குற்றவாளிகள் கணக்கெடுக்கும் பணி இணை கமிஷனர்கள் ரவி (வடசென்னை), துரைராஜ் (தென்சென்னை), பாலசுப்பிரமணியம் (மத்திய சென்னை) ஆகியோர் மேற்பார்வையில் துணை கமிஷனர்கள் மேற்பார்வையில் நடந்தது.

வடசென்னையில் 27 பேரும், மத்திய சென்னையில் 51 பேரும், தென்சென்னையில் 24 பேரும் கைது செய்யப்பட்டனர். ரவுடிகளான இவர்கள் பல்வேறு குற்றங்களில் தொடர்புடையவர்கள், கைதாணை பிறப்பித்தும் பிடிபடாமல் இருந்து வந்தனர். தொடர்ந்து ரவுடிகள் வேட்டை நடக்கிறது

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...