.

Saturday, June 30, 2007

103 வயதில் தீக்குளித்த மூதாட்டி

வாழ்க்கையில விரக்தி என்பது யாருக்கும் எந்த வயதிலும் ஏற்படலாம் என்பதற்கு உதாரணமாக அமைந்து விட்டது டெல்லியைச் சேர்ந்த "மொங்கிபேன் மகாடியா''வின் சாவு.

103 வயதில் எல்லோருக்கும் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் ஆரோக்கியத்துடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர் கடந்த வியாழக்கிழமை மாலை அவரது குடும்பத்தினருக்கு மட்டுமல்ல அந்த பகுதியில் உள்ள அனைவருக்குமே அதிர்ச்சியைக் கொடுத்தார்.

டெல்லியில் தனது 61 வயது மகன் வீட்டில் வசித்துக் கொண்டிருந்த அவர் திடீரென்று அறைக்குள் சென்று கதவை சாத்திக் கொண்டு தன் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண் டார்.

அவரது உடலில் மளமள வென பற்றிய தீயை அணைத்த மகனும், மருமகளும் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கே பாட்டியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக அறிவித்தனர்.

இந்த சம்பவம் பற்றி காந்தி கிராமம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். "தன் சக காலத்து உறவினர்கள், நண்பர்கள் எல்லாம் இறந்து விட்டதால் வாழ்க்கையில் தனிமையில் விடப்பட்டது போல் எனது தாய் உணர்ந்தாள்.

இதனால் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்தது போல் காணப்பட்டார். "இனி நான் எதுக்கு வாழணும்'' என்று அடிக்கடி கூறி வந்தார்.எனவே அந்த எண்ணங்களே அவரை தற்கொலை செய்யத் தூண்டியிருக்க வேண்டும்'' என்று மொங்கிபேனின் மகன் கூறினார்..

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...