.

Saturday, June 30, 2007

மும்பையில் மழை, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஆண்டுதோறும் வரும் பருவமழை வருகிறதோ இல்லையோ மும்பை வாழ்வு மழையால் பாதிக்கப்படுவது இயல்பாகிவிட்டது. பருவமழைக்காலத்தின் முதல் கனத்தமழை நேற்றிரவிலிருந்து தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் இரயில்பாதைகளும் சாலைகளும் நீர்தேங்கி பொதுமக்கள் வாழ்வை பாதித்துள்ளது. மும்பையின் உயிர்நாடியான இரயில் போக்குவரத்துக்கள் தடைபட்டுள்ளன. வெளியூர் வண்டிகள் புறப்படுவதும் வந்து சேருவதும் தாமதமாகின்றன. ஜூலை 27, 2005க்க்குப்பின் எடுத்துக் கொண்ட பிரசவ வைராக்கியங்கள் அவை எழுதப்பட்ட தாளிலேயே உள்ளன. வானிலை நிலையம் வழமையான சொற்றொடராக அடுத்த 48 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என ஆருடம் சொல்லி மும்பைகாரர்களை கிலியடைச் செய்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் தீவின் தெற்குமுனையிலுள்ள கொலாபாவில் 146.8மிமீ மழையும் மேற்குபுறநகர் என்று பழக்கத்தில்அழைக்கப்படும் மத்தியபகுதியின் சான் டாகுருஸில் 174.1 மி.மீ மழையும் பதிவாயுள்ளன.

DNA - Mumbai - Heavy rains strike city, transport networks thrown out of gear - Daily News & Analysis

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...