.

Saturday, June 30, 2007

இரயில்நிலையங்களில் வைஃபை வசதி

இனி இரயில்வண்டியின் ஒவ்வொரு நிறுத்தத்திலும் சூடான தேநீர் கிடைக்கிறதா எனத் தேடுவது மட்டுமன்றி மடிக்கணினியில் 'சற்றுமுன்' நடந்ததென்ன என்ற தேடலும் நடக்கும் விதமாக இந்திய இரயில்வேயின் துணைநிறுவனமான ரைல்டெல் 500 இரயில்வே நிலையங்களில் கம்பியில்லா இனையவசதியான வைஃபை நுட்பத்தை நிறுவ உள்ளது. முதற்கட்டமாக 50 நிலையங்களில் ஆரம்பிக்கப்பட உள்ளது. பெங்களூருவிலிருந்து ஆரம்பிக்கும் இப்பணி அடுத்து ஜெய்பூர் நகர நிலையத்தை எடுத்துக் கொள்ல இருக்கிறது. பெங்களூருவின் ஏர்லிங்க் நிறுவனமும் அமெரிக்க ரொன் டோக் நிறுவனமும் இணைந்து இத்திட்டத்தை அமலாக்க இருக்கின்றன.

மேலும்... The Hindu News Update Service

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...