.

Saturday, June 30, 2007

சென்னை: பிரதீபாவுக்கு ஆதரவாக நாளை பேரணி

ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளராக பிரதீபா பட்டீல் நிறுத்தப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் முதல் முறையாக பெண் வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து அதனை சிறப்பிக்கும் வகையில் சென்னையில் பெண்கள் பங்கேற்கும் பிரமாண்ட மகளிர் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்பேரணியில் கூட்டணி கட்சியினர் மட்டுமின்றி அனைத்து கட்சி மகளிரும் பங்கேற்க வேண்டுமென்று முதல்-அமைச்சர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்பேரணியில் பங்கேற்பதற்காக பிரதீபா பட்டீல் நாளை மதியம் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வருகிறார்.

பிரதீபா பட்டீலுக்கு ஆதரவாக நடைபெறும் இந்த பேரணி நாளை மாலை 3 மணிக்கு மன்றோ சிலை அருகில் இருந்து தொடங்குகிறது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 1 லட்சம் பெண்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பேரணியை முதல்- அமைச்சர் கருணாநிதி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் பிரதீபா பட்டீல் ஆகியோர் மேடையில் அமர்ந்து பார்வையிடுகிறார்கள்.

இதற்காக அண்ணா சாலையில் பெரியார் சிலைக்கும் அண்ணா சிலைக்கும் நடுவில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நாளை நடைபெறும் பேரணியையொட்டி பாது காப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கமிஷனர் லத்திகாசரண் கூறியதாவது:-

நாளை நடைபெறும் பேரணியில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து பெண்கள் பங்கேற்கிறார்கள். ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் 5 ஆயிரம் பேரில் இருந்து 10 ஆயிரம் பேர் வரை வருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.

இதனை வைத்து பார்த்தால் பேரணியில் சுமார் 1 லட்சம் பேர் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது.

பாதுகாப்புக்காக 10 கம்பெனி சிறப்பு போலீசாரும் பணியில் அமர்த்தப்பட்டுள் ளனர். மொத்தம் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொள்வார்கள்.

3 மணிக்கு தொடங்கும் இந்த பேரணி சுமார் 4 மணி நேரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம். பேரணி நடைபெறும் பாதையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்படுகிறது

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...