.

Sunday, July 29, 2007

கோவா: ஆட்சியமைக்க பா.ஜ.க தீவிரம்.

கோவா மாநிலத்தின் 40 உறுப்பினர்சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 16 இடங்களும், பாஜகவுக்கு 14 இடங்களும் உள்ளன.

காங்கிரஸின் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 3 இடங்கள். மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி 2 இடத்திலும், கோவா பாதுகாப்பு முன்னணி 2 இடத்திலும், கோவா ஜனநாயக கட்சி ஒரு இடத்திலும் வென்றன. இதைத் தவிர சுயேட்சைகள் 2 இடங்களில் வென்றனர்.

சுயேட்சைகள் மற்றும் மகாராஷ்டிரா கோமந்தகக் கட்சியின் (எம்.ஜி.பி)எம்எல்ஏக்கள் ஆதரவுடன் திகாம்பர் காமத் தலைமையில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்திருந்தது.

காங்கிரஸ் அரசுக்கு கோவா ஜனநாயக கட்சி வெளியிலிருந்து ஆதரவு தெரிவித்தது. 23 எம்எல்ஏக்களின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

இந் நிலையில் சுயேட்சை எம்எல்ஏக்களும், மகாராஷ்டிரா கோமந்தகக் கட்சி எம்எல்ஏக்களும் திடீரென காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளனர்.

மேலும் காங்கிரசைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ விக்டோரியா ஃபெர்னாண்டஸூம் எம் எல் ஏ பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

எம்எல்ஏக்கள் பலம் 19 ஆக குறைந்ததால் கோவாவில் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்த கட்சியும் சுயேட்சை எம்எல்ஏ அனில் சால்கோவோங்கர், மகாராஷ்டிரா கோமந்தக் கட்சி ஆகியவை பாஜகவை ஆதரிக்கப் போவதாக அறிவித்தன.

இதையடுத்து மனோகர் பாரிக்கர் தலைமையில் ஆட்சியைப் பிடிக்க பாஜக தீவிரமானது.

காங்கிரஸ் இதைத் தடுக்க பல வழிகளிலும் முயன்று வருகிறது. காங்கிரஸைச் சேர்ந்த சபாநாயகர் பிரதாப் சிங் ரானே சட்டசபையை கூட்டாமல் இழுத்தடித்து வருகிறார்.

இதையடுத்து 21 எம்எல்ஏக்களுடன் டெல்லி சென்றுள்ளார் பாரிக்கர். மூத்த பாஜக தலைவர்களுடன் சென்று குடியரசுத்தலைவர் பிரதீபாவை சந்திக்கவும், எம் எல் ஏக்களை அணி வகுத்துக் காட்டவும் பாரிக்கர் முடிவு செய்துள்ளார் .

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...