பாட்னா, ஜுலை.29- பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையின் காரணமாக 11 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இதில் 25 பேர் பலியானார்கள்.
மொரிஷஸில் பயணத்தைத் தொடரும் முதலைமைச்சர் நிதீஷ் குமார், பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்திட்டங்களை கவனிக்காமல் அனாதரவாக விட்டுவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் ரப்ரி தேவி கண்டனம் தெரிவித்திருக்கிறார்.
கிழக்கு உத்தரபிரதேசமும் பலத்த மழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் தத்தளிக்கிறது. இங்கு காக்ரா, குணோ, காதிநாயன் ஆகிய நதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்து விட்டது. இந்த பலத்த மழை, வெள்ளம் காரணமாக கிழக்கு உத்தரபிரதேசத்தில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 26 பேர் பலியாகி இருக்கிறார்கள்.
அசாம் மாநிலத்தில் பெய்து வரும் பலத்த மழையால் பிரம்மபுத்திரா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் சிக்கி உள்ளன. மழை வெள்ளத்துக்கு இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர்.
தினத்தந்தி
Nearly three million hit by floods in India
The Hindu : National : Rain cripples North Bihar
Death, darkness, dripping roofs in S.Asia floods
Nitish carries Hanuman Chalisa and Gangajal to Mauritius- Hindustan Times
Sunday, July 29, 2007
வடமாநிலங்களில் மழை: வெள்ளத்தில் சிக்கி 55 பேர் சாவு
Posted by
Boston Bala
at
11:36 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment