.

Tuesday, September 4, 2007

ஈழத் தமிழர் வரலாறு

சென்னை, செப். 4: ‘தமிழ் பாசறை’ என்ற பட நிறுவனம் ஈழத் தமிழர் வரலாற்று திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இதை வி.சி.குகநாதன் இயக்குகிறார். தேவா இசை அமைக்கிறார். அர்ச்சனா, ராரி, சுஜா நடித்துள்ளனர். பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகிறார்கள். 50 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. இப்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. நவம்பர்-26 ம் தேதி படம் வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து தினகரன் நிருபரிடம் வி.சி.குகநாதன் கூறியதாவது:

ஈழத்தில் வாழும் தமிழர்களின் வரலாறு, அங்கு ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள், பிறகு ஏற்பட்ட மாற்றங்கள் போன்ற கதைகளை உள்ளடக்கிய வரலாற்று திரைப்படம் இது.
50 சதவிகித படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. தேவா இசையில் 8 பாடல்கள் பதிவாகி இருக்கிறது. இதில் 3 பாடல்களை யார் கண்ணன், புகழேந்தி தங்கராஜ், செல்வராஜன் ஆகியோர் படம் பிடிக்கிறார்கள்.

ரியாஸ்கான் இலங்கை மன்னராக நடிக்கிறார். பெரிய பட்ஜெட்டில் ஒரு மணி நேர படமாக தயாரிக்கப்பட்டு ஆங்கிலம், ஜெர்மன், கனடா, பிரஞ்சு உள்ளிட்ட உலக மொழிகளில் சப் டைட்டிலுடன் வெளியிடப்படுகிறது.

இவ்வாறு வி.சி.குகநாதன் கூறினார்.


நன்றி: தினகரன்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...