.

Tuesday, September 4, 2007

பாக்கிஸ்தான்: இரு குண்டுவெடிப்புகளில் பலர் பலி

பாக்கிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நிகழ்ந்த இரு குண்டுவெடிப்புகளில் குறைந்தது 15 பேர் பலியாகியுள்ளனர். பாக்கிஸ்தானின் ராவல்பிண்டி நகரின் ஆர்.ஏ.பஜார் பகுதியில் அணுசக்தி ஊழியர்களை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் குண்டுவெடித்ததில் 17 பேர் பலியாகினர். இரண்டாவது குண்டுவெடிப்பு ராவல்பிண்டி நகரின் வர்த்தகப்பகுதியான குவாசிம் பஜாரில் நிகழ்ந்தது. இதில்12 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 38 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தலிபான் மற்றும் அல்காய்தா அமைப்புகள் இதன் பின்னணியில் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...