.

Saturday, May 26, 2007

பி.ஜே.பி யின் போஸ்டருக்கு எதிர்ப்பு!

பி.ஜே.பி.யின் போஸ்டர் ஒன்றுக்கு, பி.ஜே.பியின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மனைவி ஷீதல் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, இன்னமும் பதிவு செய்யப்படாத புகார் ஒன்றையும் அவர் காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பி.ஜே.பி.யின் மூன்றாண்டு ஆட்சி நிறைவையொட்டி கடந்த ஏப்ரல் 15 ம் தேதி அதன் எம்.எல்.ஏ சூர்யகாந்த் வியாஸ் என்பவரால் வெளியிடப்பட்ட போஸ்டரில் வாஜ்பேய், அத்வானி, ராஜ்நாத் ஆகியோரை முறையே பிரம்மா, விஷ்ணு, சிவனாகவும் மேலும் மாநில முதல்வர் தொடங்கி மூத்த அமைச்சர்கள் பலரும் தேவ தேவதைகளாக சித்தரிக்கப்பட்டுள்ளனராம்.

இது தன்னுடைய மற்றும் கோடிக்கணக்கான இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக ஷீதல்குமாரின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

மேலும் விபரங்களுக்கு: டைம்ஸ் ஆஃப் இந்தியா

1 comment:

மருதநாயகம் said...

இது சம்மந்தமான என்னுடைய பதிவு

http://maruthanayagam.blogspot.com/2007/04/blog-post_4703.html

-o❢o-

b r e a k i n g   n e w s...