.

Saturday, May 26, 2007

ஐ டி சிறப்பு பொருளாதார மண்டலம் - சென்னை அருகில்!!

சென்னை அருகே, காஞ்சி மாவட்டத்தில் ரூ. 3750 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பப் பூங்காவுடன் கூடிய சிறப்பு பொருளாதார மையத்தை ஏற்படுத்தும் ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தாகியுள்ளது.

துபாயைச் சேர்ந்த ஈடிஏ அஸ்கான் நிறுவனம் உலகப் புகழ் பெற்ற கட்டுமான நிறுவனமாகும். இந்த நிறுவனத்துடன் இணைந்த ஈடிஏ ஸ்டார் பிராப்பர்டி டெவலப்பர்ஸ் நிறுவனமும், தமிழக அரசின் தொழில் வளர்ச்சிக் கழகமும் இணைந்து சென்னை அருகே காஞ்சிபுரம் மாவட்டத்தில், புதிய சிறப்புப் பொருளாதார மண்டலத்தை ஏற்படுத்தவுள்ளன. ரூ.3750 கோடியில் உருவாகும் இந்த சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, நகரியம் உள்ளிட்டவை அமைக்கப்படும்.

இதுதொடர்பான ஒப்பந்தம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் கையெழுத்தானது. ஈடிஏ அஸ்கான் குழும தலைவர் சையத் சலாஹுதீன், டிட்கோ தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ராமசுந்தரம் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

தட்ஸ்தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...