.

Saturday, May 26, 2007

தமிழறிஞர் படைப்புகள் நாட்டுடமை.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் படி
இருபது தமிழறிஞர்கள்; படைப்பாளிகளின் ஆக்கங்கள் நாட்டுடமையாக்கப்படுகின்றன.
இதற்காக அவர்களின் மரபுரிமையாளர்களுக்கு மொத்தம் ரூ. ஒரு கோடியே எண்பது இலட்சம் பரிவுத்தொகையாக வழங்கப்பட தமிழக முதல்வர் அனுமதி வழங்கியுள்ளார்.

இந்த அரசு, இதற்கு முன்னரும் பதினாறு தமிழறிஞர் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு ஒரு கோடியே, இருபத்து மூன்று இலட்சம் ரூபாய் மரபுரிமையர்களுக்கு வழங்கியுள்ளது.

இச்சமயம் நாட்டுடமையாக்கப்பட்ட தமிழறிஞர்களில், கி.வா.ஜ, பேராசிரியர் அ.ச.ஞா, கி.ஆ.பெ, திருக்குறள் முனுசாமி, கவிஞர் சுரதா, கவிஞர் மருதகாசி, குன்றக்குடி அடிகளார், சாவி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...