.

Saturday, May 26, 2007

தொடரும் 'பருத்தி வீரன்' பிரச்னை

'பருத்தி வீரன்' படத்துக்காகத் தான் செலவழித்த பணத்தைப் பெற்றுத் தரவேண்டும் என இயக்குநர் அமீர் தயாரிப்பாளர் சங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

'பருத்தி வீரன்' படத்தை முதலில் ஸ்டுடியோ ஸ்கிரீன் பட நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்தார். பின்னர் அவர் விலக, இயக்குநர் அமீரே படத் தயாரிப்பை ஏற்றார். ஆனால் படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட மீண்டும் ஸ்டுடியோ ஸ்கிரீன் நிறுவனமே படத்தை வாங்கி வெளியிட்டது.

படத்துக்காக அமீர் செலவு செய்த பணத்தை (ரூ.1.75 கோடி) படத்தின் வசூலிலிருந்து தருவதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் படம் பெரிய வெற்றி பெற்று, நல்ல வசூலோடு 100வது நாளை நெருங்கியும் அமீருக்கு பணம் தரப்படவில்லை.

Dinamani

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...