ஆளும் கூட்டணியில் இருந்தாலும் காவல்துறையினர் பொய் வழக்கு போடுவதும், அடக்குமுறைகளும் தொடர்கின்றன என்றார் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் தொல் திருமாவளவன்.
கொத்தடிமைகள்
திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களில் கல்குவாரிகள், தறிப் பட்டறைகளில் தலித் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர். அரசு இதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சி மாநகரில் சிறுத்தைகள் அமைப்பின் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் பொய் வழக்குகள் போடுகின்றனர். இதுதொடர்பாக மண்டல காவல் துறைத் தலைவரையும் மாநகர் காவல் ஆணையரையும் சந்திப்பேன்.
கரூர் மாவட்டம், தம்மாநாயக்கன்பட்டியில் தலித் மக்கள் நடைபாதையாக இருந்த பகுதி, பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்புகிறோம் என்ற பெயரில் அடைக்கப்பட்டுள்ளது.
தினமணி
Monday, May 28, 2007
அடக்குமுறைகள் தொடர்கின்றன: திருமாவளவன்
Labels:
அரசியல்,
சட்டம் - நீதி,
சமூகம்,
தமிழ்நாடு
Posted by
Boston Bala
at
9:15 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment