நைஜீரியவின் புதிய அதிபராக உமாரு யார் அடுவா இன்று அதன் தலைநகர் அபுஜாவில் பதவி ஏற்றுக் கொண்டார். வெள்ளை நிற அங்கி அணிந்து ஒரு மேடையின் மீது நின்றவாறு அவர் பதவி ஏற்றுக் கொண்டார். பதவி ஏற்றுக் கொள்வதை குறிக்கும் வகையில் உறுதிமொழியில் அவர் கையொப்பம் இட்டபோது அவரது ஆதரவாளர்கள் வாழ்த்தொலிகளை எழுப்பினர்.
தம்மை பதவிக்கு கொண்டு வந்த தேர்தலில் சில குறைபாடுகளும், தவறுகளும் இருந்ததை அவர் ஒப்புக் கொண்டார். இந்த அதிபர் தேர்தல் தவறானது என சர்வதேச பார்வையாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். நைஜீரிய மக்கள் சிந்தித்து முனைப்போடு சிறப்பாக செயல்படக் கூடியவர்கள் என்றும், பணிவு மற்றும் தாராள மனப்பான்மையை வெளிப்படுத்தும் குணங்களை பின்பற்றுமாறும் புதிய அதிபர் கோரியுள்ளார்.
எண்ணை வளம் மிகுந்த நிஜர் நதியின் டெல்டாப் பகுதியில் பணிபுரியும் பல வெளிநாட்டவர்களை கடத்தும் ஆயுதக் குழுக்களால் ஏற்படும் பிரச்சினைகள் மீது உடனடி கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
- பிபிசி தமிழ்
BBC NEWS | Africa | New Nigerian president sworn in
Wednesday, May 30, 2007
நைஜிரியாவில் புதிய அதிபர் பதவியேற்பு
Posted by
Boston Bala
at
1:35 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment