பெய்ஜிங், மே 30: ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய சீனாவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை முன்னாள் இயக்குனர் ஜெங் ஜியாவோ-க்கு அந்நாட்டு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்தது.
63 வயதான ஜெங் ஏற்கெனவே பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவர் தனது பதவிக் காலத்தில் பணமாகவும், பரிசுப் பொருள்கள் மூலமாகவும் ரூ.5 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்கில் ஜெங் தவிர 30 உயர்நிலை அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக பத்திரிகைகள் ஏற்கெனவே செய்திவெளியிட்டு வந்தன. மருந்து நிறுவனங்களிடமிருந்து லஞ்சம் பெற்றதாக ஜெங்கின் மனைவி, மகன் ஆகியோர் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
தினமணி
Wednesday, May 30, 2007
சீனாவில் ஊழல் அதிகாரிக்கு மரண தண்டனை
Labels:
உலகம்,
ஊழல்,
சட்டம் - நீதி
Posted by
Boston Bala
at
9:15 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
2 comments:
breaking news : http://www.bombaynews.net/story/252549
விளிப்பிலி... இந்த செய்தி ஏற்கனவே சற்றுமுன்னில் வந்திருக்கிறது.
Post a Comment