.

Tuesday, May 29, 2007

சென்னையில் 2 லட்சம் மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி, அங்கீகாரம் பெற்றதனியார் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு தமிழகஅரசு சார்பில் ஆண்டு தோறும் இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் 1 முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ- மாணவிகள் பள்ளிகூடங்களுக்கு அரசு பஸ்சில் இலவசமாக பயணம்மேற்கொள்ளலாம்.இந்த ஆண்டு முதல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும் இலவச பஸ்பாஸ் வழங்கப் படும் என்று அரசு அறிவித்து உள்ளது.
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகூடங்கள் 1ந்தேதி தொடங்குகிறது. பள்ளி தொடங்கும் முதல் நாளே இலவச பஸ்பாஸ்களை வழங்க சென்னைபெருநகர போக்கு வரத்து கழகம் தயாராக உள்ளது. போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் ஆர்.பாலசுப்பிரமணியம் கூறுகையில்,சென்னையில் படிக்கும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு 1-ந்தேதி முதல் இலவச பஸ் பாஸ் வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுஉள்ளன.
பள்ளிகளுக்கு நேரில் சென்று வழங்கப்படுகிறது. பஸ் பாஸ் பெற விரும்புவோர் முறையாக பள்ளி தலைமை ஆசிரியரிடம் விண்ணப் பித்தால் புகைப்படம் எடுத்து உடனடியாக வழங்கப்படும்.
மாணவர்களின் விண்ணப் பங்களை ஒட்டு மொத்தமாக சேகரித்து பள்ளி நிர்வாகம் கொடுத்தால் அங்கு போக்குவரத்து கழக ஊழியர்கள் அனுப்பபட்டு பஸ்பாஸ் வழங்கப்படும். கடந்த ஆண்டு 2லட்சத்து 38 ஆயிரம் பேருக்கு பஸ்பாஸ் வழங்கப்பட்டது. இந்த ஆண்டு அதை விட கூடுதலாகவழங்க வேண்டியிருக்கும்.
சுமார் 2 லட்சம் மாணவ- மாணவிகளுக்கு மேல் வழங்க திட்டமிட்டுள்ளோம் என்றார்.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...