.

Monday, June 25, 2007

பிரதமர் சகோதரர் மகளுக்கும் வரதட்சணைக் கொடுமை.

இந்தியாவின் சமூக அவலங்களுள் ஒன்றான வரதட்சணைக்கொடுமை, இந்தியப்பிரதமர் குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை. பிரதமர் மன்மோஹன் சிங்கின் சகோதரர் இந்திரஜித் சிங்கின் மகளான அம்னீத்கவுர் லூதியானா மாவட்ட காவல்துறையிடம் வரதட்சணை புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் தன் கணவர் ராணா இந்திவார் சிங், நாத்தனார்கள் பல்விந்தர் கவுர், ஜஸ்மீத் கவுர் மற்றும் அவதார் சிங் ஆகியோர் மீது வரதட்சணைக்கொடுமை குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதன் பேரில் காவல்துறை நடவடிக்கை எடுத்து, வழக்கு பதிவு செய்து பல்விந்தர் கவுரை நீதிமன்ற காவலிலும், ஜஸ்மீத் கவுர், அவதார்சிங் ஆகியோரை காவல்நிலைய காவலிலும் வைத்துள்ளனர். வரதட்சணையாக வழங்கப்பட்ட பொருட்களையும் காவல்துறையினர் கைப்பற்றினர்
என்கிறது இந்தச்செய்தி.

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...