.

Tuesday, March 27, 2007

சற்றுமுன்:-பெண்ணுறை வழங்கும் திட்டம்

தமிழ்நாட்டில் பெண்பாலியல் தொழிலாளர்களுக்கு பெண்ணுறையை விநியோகிக்கும் மிகப்பெரிய திட்டம் ஒன்று துவங்கப் பட்டுள்ளது.

தமிழக அரசின் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையமும், வேறு சில தொண்டு நிறுவனங்களும் இணைந்து இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த இருக்கின்றன.
இதன்படி, மாநிலத்தில் இருக்கும் சுமார் மூவாயிரம் பெண் பாலியல் தொழிலாளர்களுக்கு, அடுத்த நான்கு மாத காலத்தில் அறுபதாயிரம் பெண்ணுறைகள், மிகக்குறைந்த விலையில் விநியோகிக்கப்பட இருக்கின்றன.

பெண் பாலியல் தொழிலாளர்கள் மூலம் எச்.ஐ.வி தொற்று பரவுவதை தடுக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் பரீட்சார்த்த முறையில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

குறிப்பாக, அவர்களிடம் வரும் ஆண் வாடிக்கையாளர்கள் ஆணுறையை அணிய மறுக்கும் சூழல்களில், இந்த பெண்ணுறை அவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு கவசமாக இருக்கும் என்கிற கருத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளாளும், தன்னார்வத் தொண்டு நிறுவன ஊழியர்களாலும் முன்வைக்கப்படுகிறது.

மேலும், பெண்ணுறை என்பது, பாலியல் தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாமல், சராசரி பெண்களுக்கும் கூட, பால்வினை நோய்களிலிருந்தும், தேவையற்ற கருத்தரிப்பிலிருந்தும் பாதுகாப்பளிக்கும் என்கிற கருத்தும் இவர்களால் முன்வைக்கப்படுகிறது.

பெண்களின் பாலியல் சுதந்திரம் மற்றும் உடல் ஆரோக்கியத்திலும் இந்த பெண்ணுறை ஆக்கப்பூர்வமான பங்காற்றக்கூடிய சாதனமாக உருவெடுக்கும் என்கிற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இதன் பல்வேறு பரிமாணங்களை அலசும் பெட்டகத்தை நேயர்கள் இங்கே கேட்கலாம்.

ஒலிவடிவில் :- www.bbc.co.uk/tamil/wcondom.ram

நன்றி: பிபிசி-தமிழ்

2 comments:

Adirai Media said...

இதெல்லாம் பார்க்கும் பொழுது அரசு விபச்சாரத்தை ஊக்குவிப்பதாக தெரிகிறது.

கவிதா | Kavitha said...

இல்லை , நீங்கள் அந்த ஒலி நாடாவை கொஞ்சம் கேட்டு பாருங்கள். அதில் இரண்டு விபச்சாரம் தொழிலாக கொண்ட பெண்கள் பேசி இருக்கிறார்கள்.. அவர்களின் நிலைக்கு இது தேவை என்றே தோன்றுகிறது.

-o❢o-

b r e a k i n g   n e w s...