.

Friday, March 30, 2007

சற்றுமுன்:'இட ஒதுக்கீடு :பார்லி.யை உடனடியாக கூட்டவேண்டும்'

27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது தொடர்பாக விவாதிக்க, பாராளுமன்றத்தின் இரு அவைகளையும் உடனடியாக கூட்டவேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் கருணாநிதி கொண்டு வந்த இந்த தீர்மானத்தில்,உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதாவுக்கு சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த தடை,பாராளுமன்றத்தின் உரிமையை பாதிப்பதாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த தீர்ப்பு ,சமூக மற்றும் கல்வி ரீதியாக நசுக்கப்பட்ட மக்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகவும் அத்தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


"Yahoo-Tamil"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...