.

Wednesday, March 28, 2007

சற்றுமுன்: விவசாயிகளை மகிழ்விப்போம் - கருணாநிதி உறுதி

இலவச நிலங்கள் வழங்கி ஏழைகளை முடிந்தவரையில் மகிழ்விப்போம் என்று முதல்வர் கருணாநிதி உறுதி அளித்துள்ளார்.

தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்துள்ள அறிக்கை:
அதிமுக நிதி நிலை அறிக்கையிலே, 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக ஆதாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்ததை நம்பி: ஏழை விவசாயக் குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 2 ஏக்கர் நிலம் வழங்குவோம் என்று தெரிவித்தோம். ஆட்சிப் பொறுப்பேற்றதும் தான், 50 லட்சம் ஏக்கர் அளவுக்கு இல்லை என்பது தெரிய வந்தது.
ஆக்கிரமிப்பு இல்லாத ஒப்படை செய்யக் கூடிய அரசு புறம்போக்கு தரிசு நிலம் 1 லட்சத்து 95 ஆயிரம் ஏக்கர். சிறு குறு விவசாயிகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு புறம்போக்கு தரிசு நிலம் 67 ஆயிரம் ஏக்கர். சிறு குறு விவசாயிகளுக்குச் சொந்தமான பட்டா தரிசு நிலம் 7 லட்சம் ஏக்கர் இருப்பது கண்டறியப்பட்டது.

இருப்பிலே உள்ள நிலத்தின் மதிப்பு, மொத்தமுள்ள நிலத்தின் பரப்பளவு ஆகியவற்றை கணக்கிட்டு, அதிகம் பேர் பயன்பெறும் வகையில் ஒரு ஏக்கர் என்றும், அரை ஏக்கர் என்றும், சில இடங்களில் 2 ஏக்கர் என்றும் தற்போது இலவசமாக நிலங்களை வழங்கி வருகிறோம்.

இந்த மூன்று கட்டங்களிலும் இதுவரை 77,118 ஏக்கர் நிலம், 71,755 குடும்பங்களுக்கு இதுவரை இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

- தினகரன்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...