.

Thursday, March 29, 2007

சட்டசபைக்கு செல்லாதது ஏன்? ஜெயலலிதா

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான ஜெயலலிதா ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழக அரசின் பட்ஜெட் விவாதம் குறித்து எனது கருத்தை சட்டசபையில் பேச வேண்டும் என்று விருப்பம் இருந்தது. ஆனால் சபாநாயகர் அதற்கு நேரம் ஒதுக்கி எனது பேச்சுக்கு இடையே இடையுறு செய்யாமல் பார்த்துக் கொண்டால், முதல்-அமைச்சரின் பதிலை வாங்கி தருவதாக இருந்தால் பேசலாம்.

அ.தி.மு.க. ஆட்சியின் போது அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் போதிய நேரம் ஒதுக்கப்பட்டது. சபை விதிகள்படி அவர்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டன.இந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் அ.தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச போதுமான நேரம் ஒதுக்கவில்லை.

நான் பேச வந்தாலும் இதுதான் நடக்கும். இடையுறு செய்வார்கள், அவ மதிப்பார்கள், மோசமான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள்.எனவேதான் நான் சட்டசபையில் பட்ஜெட் உரையில் பேசவில்லை. அதே நேரத்தில் நான் பேச வேண்டிய கருத்துக்களை இந்த அறிக்கை மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தி கொள்கிறேன்.

- மாலை மலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...