.

Thursday, March 29, 2007

சற்றுமுன்: திருவாரூர் கோவிலில் நாளை போராட்டம்: இல.கணேசன்

பா.ஜனதா மாநிலத் தலை வர் இல.கணேசன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

திருவாரூரில் ஆழித் தேர் பாரம்பரிய முறைப்படி நாளை பங்குனி ஆயில்ய நட்சத்திரத்தில் நடத்தப்பட வேண்டும். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு வந்த பின்னர் கூட கோரிக்கைகளை புறக்கனித்து ஆலய மற்றும் அரசு நிர்வாகம் தன்னிச்சையாக வேறு தேதியில் நடத்துவது என முடிவு செய்திருக்கிறது. நாளைய தினம் பரிச்சார்த்தமாக மாதிரி தேரோட்டம் திட்டமிட்டபடி நடைபெறும்.

இது குறித்து அமைச்சர் பெரியகருப்பன் தனது அறிக் கையில் சில உண்மைகளை வெளியிட்டுள்ளார். ஆனால் உண்மைக்கு புறம்பான செய்திகளையும் வெளியிட் டுள்ளார்.

திருவாரூரையே சேர்ந்த கருணாநிதி இதில் தலையிட்டு அடுத்த ஆண்டு மரபுப்படி ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்தப்படும் என்று உத்திரவாதம் தர வேண்டுகிறேன். குறைந்த பட் சம் அமைச்சர் மூலமாவது, அதிகாரிகள் மூலமாவது இந்த உத்திரவாதத்தை அரசு தரவேண்டும். இல்லையேல் நாளை திட்டமிட்டபடி தேரோட்ட போராட்டம் நடை பெறும்.


மாலை மலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...