.

Thursday, March 29, 2007

ஒரகடத்தில் டிரக் தொழிற்சாலை :ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும் புதூர் அருகே ஒரகடத்தில் 60 ஏக்கர் பரப்பில் ரூ.75 கோடி முதலீட்டில் உயர்ரக டிரக்குகளை தயாரிக்கும் புதிய கனரக வாகன தொழிற்சாலை ஒன்றை அமைத்துள்ளது.

இந்த தொழிற்சாலையின் செயல்பாடுகள் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதனை தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் பல்வேறு தொழிற் சாலைகளை தொடங்க முதலமைச்சர் அனுமதி வழங்கி மாநிலத்தை வளர்ச்சி பாதையில் அழைத்து செல்கிறார். இதுவரை 10 பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் போக்குவரத்து உள்ளிட்ட எல்லா உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன. இதன் காரணமாக பல்வேறு புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படுகிறது.


"மாலைச் சுடர்"

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...