.

Monday, March 26, 2007

சற்றுமுன்: விஜயகாந்த் திருமண மண்டபம் இடிக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி

விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடிப்பதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் பிரேமலதா மேல் முறையீடு செய்தார்
இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் எச்.கே.சீமா, எல்.எஸ்.பாண்டா ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் பெஞ்ச், மண்டபத்தை இடிப்பதற்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

மேலும், கோயம்பேடு சந்திப்பில் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மேம்பாலம் கட்ட வழி விடும்படி அறிவுரை கூறியது.

இதையடுத்து, "மண்டபத்தை ஒப்படைக்க ஒரு வாரம் கால அவகாசம் தர வேண்டும்' என பிரேமலதா சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் விசுவநாத அய்யர் கேட்டார். அதை சுப்ரீம் கோர்ட் ஏற்கவில்லை.

- தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...