.

Saturday, July 28, 2007

வைகுண்ட ராஜனும், போஸ்டரும்!

தலைமறைவாக இருக்கும் வைகுண்டராஜன் மீது, புதிய புதிய வழக்குகளைப் போட்டு வருகிறார்கள். அவரை எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறது காவல்துறை. ஆனால் முதல்வரோ, "அ.தி.மு.க.வுக்கு பண்ணையார் வெங்கடேஷ் என்கௌன்ட்டர் போல் தி.மு.க.வுக்கு வைகுண்டராஜன் விவகாரம் ஆகிவிடக்கூடாது'' என்று கவனமாக காய் நகர்த்தி வருகிறாராம்.

இதற்கிடையில் தென் மாவட்டங்களில் ஆங்காங்கே போஸ்டர்கள் அடித்து ஒட்டி வருகிறது நாடார் தரப்பு. அதில் உள்ள வாசகங்கள், நாடார் சமுதாயத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆரம்பத்தில் வைகுண்டராஜனின் விவகாரத்தை தனிப்பட்ட மோதலாக அந்தச் சமுதாய மக்கள் நினைத்தார்கள்.

ஆனால் டாட்டாவிற்கு தொழிற்சாலை அமைக்க நடைபெறும் நில எடுப்பிற்குப் பிறகு தங்கள் சமுதாயத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலாக நினைக்கிறார்கள். இதில் சமுதாய உணர்வு அடங்கிக் கிடக்கிறது என்பதைப் புரிந்து கொண்ட முதல்வர் தற்போது, "டாட்டா தொழிற்சாலையில் சமுதாய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்'' என்று அறிக்கை விட்டுள்ளார்.

தமிழன் எக்ஸ்பிரஸ்

Vaikundarajan case takes a new turn :: Chennai Online News Service - View News
The Hindu News Service :: Company MD files anticipatory bail application
Jaya TV partner files petition for bail: ஜெயா டிவி பங்குதாரர் 'தலைமறைவு' - வைகுண்டராஜன் முன் ஜாமீன் கோரி மனு
Zee News - Stiff opposition to Tata`s titanium-di-oxide project in TN: "40,000 families would be displaced as the Tata company is planning to set up the plant on 12,000 acres of land. "

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...