.

Saturday, July 28, 2007

பாலாற்றில் அணை கட்ட ஆந்திர அரசு தீவிரம்.

ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த கணேசபுரம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த அணை கட்டினால் வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம் உள்பட 5 மாவட்டங்கள் வறண்டு விடும் அபாயம் உள்ளது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும். இந்த அணை கட்டுவதற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., பா.ம.க. போன்ற கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பா.ம.க. சார்பில் அணை கட்டும் பகுதிக்கு சென்று போராட்டமும் நடத்தப்பட்டது.

இந்த அணை கட்டுவதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனாலும் பாலாற்றின் குறுக்கே அணை கட்டுவதில் ஆந்திர அரசு தீவிரமாக உள்ளது. அணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை விரைவில் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

அடிக்கல் நாட்டு விழாவில் முதல்-மந்திரி ராஜசேகர ரெட்டி, பொதுப்பணித்துறை மந்திரி, நீர்ப்பாசனத்துறை மந்திரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள், குப்பம் பகுதியில் உள்ள விவசாய சங்க நிர்வாகிகள் கலந்து கொள்கிறார்கள்.

அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்திற்கு செல்ல தனிபாதை ஒன்றும் வேகமாக அமைக்கப்பட்டது. அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இது தவிர ஆந்திர- தமிழக எல்லைப்பகுதியில் போலீஸ் கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆந்திர அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்டும் பகுதிக்குள் அத்துமீறி நுழை பவர்களை கைது செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மாலைமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...