.

Saturday, July 28, 2007

'பா.ம.க. ஒரு புலி' - முதலமைச்சர் கருணாநிதி பேட்டி

புதுடில்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தபோது தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் அளித்த பதில்கள்:

செய்தியாளர்: மக்கள் பிரச் சினைகளை நாங்கள் எடுத்துச் சொல்வோம். யாரும் வாய்ப் பூட்டு போட முடியாது என்று பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் கூறி இருப்பதைப் பற்றி?

கலைஞர்: மக்கள் பிரச்சி னைகளை எடுத்து வைக்க வேண்டாமென்று நாங்கள் சொல்லவில்லை. அண்ணா ஒரு முறை சட்டப் பேரவையிலே சொன்னார். 1967 ஆம் ஆண்டு அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார் பிலே தேர்தலிலே நின்றார் என்றாலும் கூட, சுதந்திரக் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம், சோஷலிஸ்ட் கட்சி போன்ற கட்சிகளை எல்லாம் கூட்ட ணியாகச் சேர்த்துக் கொண்டு, அந்தத் தேர்தலில் அண்ணா ஈடு பட்டார்.

அதிலே நாங்கள் மகத்தான் வெற்றியும் பெற் றோம். கூட்டணியில் உள்ள சிலர் ஓராண்டிற்குப் பிறகு அல்லது சில மாதங்களுக்குப் பிறகு அண்ணா தலைமையில் உள்ள கழக அரசை விமர்சிக் கும்போது சற்றுக் கடுமையாக விமர்சித்தார்கள். அண்ணா விமர்சனங்களுக்கு விரோதி அல்ல. அவரும் தலை சிறந்த ஜனநாயகவாதிதான். அவரிடம் பயின்றவன்தான் நானும்.

அந்த நேரத்திலே அண்ணா - என்னுடைய அரசின் குற்றம் குறைகளை எடுத்துச் சொல்லும்போது சில கட்சிகள் பூனை தன் குட்டியை வாயிலே கவ்வி எடுத்துச் செல்வதைப் போல மென்மையாக எடுத்துச் சொல்கின்றன. சில கட்சிகள் பூனை எலியைப் பிடித்து வாயிலே கவ்விக்கொண்டு செல் வதைப் போல் குற்றம் குறை களைக் கண்டிக்கின்றன என்று அண்ணா சொன்னார். அதற் காக பூனை, குட்டியைக் கவ்வித் தூக்கிக் கொண்டு சொல்லக் கூடாது என்று கூறவில்லை.

செய்தியாளர்: நீங்கள் கூறிய தில் பா.ம.க. பூனையா? எலியா?

கலைஞர்: என் கருத்துப்படி பா.ம.க. ஒரு புலி. நீங்கள் தூண்டிவிடலாம் என்று நினைத் தால், புலி என்ன செய்யும் என்று உங்களுக்கே தெரியும்.

செய்தியாளர்: குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணத் தின் போது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் துணை வியாருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டபோது கனிமொழிதான் உடனடியாக ஓடிவந்து அவரை அழைத்துச் சென்று பணிவிடை செய்தார். அதை எல்லோரும் பாராட்டி னார்கள். உங்கள் கவனத்திற் கும் கொண்டு வரலாம் என நினைத்தோம்.

கலைஞர்: நானும் கேள்விப் பட்டேன்.

முழுவதும் படிக்க...

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...