.

Sunday, March 4, 2007

கோவையில் 25 லட்சம் மரக்கன்று நட மும்முரம்

கோவை ஈஷா யோக மையம் சார் பில் பசுமைக் கரங்கள் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. மாசுபட்டு வரும் சுற்றுச்சூழலை மரம் வளர்ப்பதன் மூலம் மேம்படுத்துவது திட்டத்தின் நோக்கமாகும். தமிழகம் முழுவதும் 10 சதவீத நிலப்பரப்பில் 12 கோடி மரம் நட திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டு 2.5 கோடி மரங்கள் நட்டு பராமரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
கோவை மாநகரில் 25 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட உள்ளன. இதற்காக வடவள்ளி, சாய்பாபாகாலனி, சிங்காநல்லூர் பகுதியில் நாற்றுப்பண்ணைகள் அமைக்கப்பட்டு உள்ளன.


தமிழ் முரசு

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...