.

Sunday, August 12, 2007

பஸ்ஸில் மின்சாரக் கம்பி விழுந்து 11 பேர் பலி

லாக்னோவில் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பஸ்ஸில் 11,000 கிலோ வாட் மின்சாரம் கடத்தும் கம்பி விழுந்ததில் டயர்கள் வெடித்து தீப்பிடித்துக்கொண்டது. இந்த சம்பவத்தில் 11பேர் இறந்தனர் 40 பேர் கவலைக்கிடமாயுள்ளனர்.

Eleven passengers electrocuted; 40 critical -The Hindu

2 comments:

மாசிலா said...

மிகவும் வருத்தமான செய்தி. ஏந்தான் இந்த அளவு வரும்வரை பொது துறைகள் கவனிப்பில்லாமல் இருந்தனரோ!!!

இறந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு இவர்கள் என்னத்தை சொல்லி எதைச் செய்து என்ன பிரயோசனம். போன உயிர்கள் திரும்பி வருமா?

இந்த அவசர உலகில் அவரவர்களும் பணம் சம்பாதிப்பதில் மட்டும்தான் குறியாக இருக்கிறார்கள். மேலும் இதுபோல் தொடர்ந்து நடவாமல் இருக்க பொதுத்துறைகள் அரசாங்கம் நல்ல மாற்று நடவடிக்கைகள் எடுக்கும் என நம்புவோம்.

இது போன்ற பரிதாபகரமான நிகழ்ச்சிகள் இந்தியாவில் எங்கு நடந்தாலும், ஒவ்வொரு மாநில அரசாங்கமும் உடனடியாக தங்களது துறைசார்ந்த அதிகாரிகளுக்கு அறிக்கைகள் அனுப்பி இதுபோல் அசம்பாவிதங்கள் நடக்காவண்ணம் இருக்க உடனடியாக சோதனைகள் செய்யச் சொல்லி ஆவன செய்ய வேண்டும்.

மறைந்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.

மணியன் said...

11கேவி போன்ற உயரழுத்த மின்சாரக் கம்பிகள் விட்டுக் கொண்டால் உடனேயே 'டிரிப்்ப்' ஆகிவிடும். எப்படி 'லைவ்' கம்பியுடன் தொடர்பு ஏற்பட்டது என்பது செய்தியில் இல்லை.

-o❢o-

b r e a k i n g   n e w s...