.

Sunday, March 4, 2007

The Lost Tomb of Christ இந்தியாவில் ஒளிபரப்பு இல்லை.

"The Lost Tomb of Christ" என்ற தொகுப்பு படத்தை Discovery Channel வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்புகிறது. அதை இந்தியாவில் ஒளிப்பரப்ப கிருத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதை அடுத்த இந்தியாவில் அது ஒளிபரப்பாகாது என தெரிகிறது.

அப்படத்தில் Jesus was buried in Jerusalem and fathered a child named Judah with Magdalene.

CNN-IBN (IBNLIVE.COM)

4 comments:

அரவிந்தன் நீலகண்டன் said...

அந்த ஆவணப்படம் அப்படி பெரிய உண்மைகளை கொண்டு வந்திடும் என நான் நினைக்கவில்லை. ஏசு என்று ஒருவர் வாழ்ந்ததற்கு இந்த நிமிடம் வரை எவ்வித அகழ்வாரய்ச்சி தரவுகளும் இல்லை. வெளிநாடுகளில் சர்ச் இந்த ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் தரத்திற்கும் இந்தியாவில் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலைக்கும் தெளிவான வேறுபாடு இருக்கிறதையும் காண முடிகிறது. வெளிநாடுகளில் சிறந்த வரலாற்றறிஞர்களைக் கொண்டு இதனை எதிர்த்திருக்கிறார்கள். இந்த ஆவணப்படத்தின் குறைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் இந்தியாவில் ஏசுவின் வரலாற்று கதையாடலை கேள்விக்குள்ளாக்கும் எந்த வித முணுமுணுப்பும் வெளியே வந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள். முன்பு சிகரெட்டுகள் குறித்து ஒரு ஆவணப்படம் பார்த்தேன். அதில் ஒரு பன்னாட்டு சிகரெட் கம்பெனி ஆசிய-வளரும் நாடுகளில் விற்கும் சிகறெட்டின் தரம் ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் விற்கும் தரத்தை விட மட்டமாக இருப்பதையும், பல நேரங்களில் அங்கு தரக்குறைவால் தூக்கி எறியப்படும் சிகறெட்டூகள் வளரும் நாடுகளில் 'இம்போர்டட் சிகரெட்டாக' வருவதையும் காட்டினார்கள். ம்ம்ம்...சிகரெட் மட்டுமல்ல கொக்ககோலா, பெப்ஸி, ஏசு எல்லாமே அப்படித்தான் மார்க்கெட்டிங் செய்யப்படுவதாக தோன்றுகிறது, மேற்கில் தூக்கி எறியப்பட்ட இறையியல் நிலைபாடுகள் இங்கே கிறிஸ்தவ சர்ச்சின் கோட்பாடுகளாக, நடவடிக்கைகளாக விளங்குகின்றன.

சிவபாலன் said...

அரவிந்தன் நீலகண்டன்,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

Anonymous said...

"The Lost Tomb of Christ" என்ற தொகுப்பு படத்தை Discovery Channel வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்புகிறது. அதை இந்தியாவில் ஒளிப்பரப்ப கிருத்துவ அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதை அடுத்த இந்தியாவில் அது ஒளிபரப்பாகாது என தெரிகிறது.

அப்படத்தில் Jesus was buried in Jerusalem and fathered a child named Judah with Magdalene.

What is the govt. of india doing.
Is this not a violation of freedom
of expression.Christians and Muslims demanded banning of Davinci
Code. Some state govts. obliged them. The left kept mum.Now also
the left may keep mum and tamil
writers who shed tears for Madani
will also keep mum.It is fashionable to criticise Modi
and VHP and keep mum or support
bans when demanded by christians
and muslims.AIMPLB demanded
that Taslima should be expelled
from India.Tamil writers who shed
tears for Madani did not even seem
to have opposed this.What a shame.
ravi srinivas

மாசிலா said...

இது உண்மையில் இந்தியாவில் உள்ள மதத்தவர்கள் வேண்டுதலினால் தடைசெய்யப் பட்டதா அல்லது மேலை நாட்டவர்கள் ஏவிவிட்டு செய்யப் பட்டதா?

உண்மையான ஜனநாயகம் மற்றும் கருத்து சுதந்திரத்தை மதிப்பவர்களாக இருப்பின், இப்படி செய்திருக்க கூடாது.

இது ஒரு அலங்கரிக்கப்பட்ட வேஷமாகவே தெரிகிறது. கூச்சல் கோஷங்கள் போடுவதற்கு கூலிகள் இருக்கும்வரை இந்தியாவில் எதுவும் சாத்தியமே.

ஒருவேளை, பணக்கார நாடுகள் இந்திய ஆளும் வர்க்கத்திற்கு "கொடுக்க வேண்டியதை" கொடுத்து அழுத்தத்தை ஏற்படுத்தியதோ?

வறுமை ஒழிப்பு, அனைவருக்கும் அடிப்படை மனித உரிமைகள், சமுதாயத்தில் தகுந்த மரியாதைகள், முன்னேற்றத்தால் கிடைக்கும் பலன்களை ஒழுங்கான முறையில் பங்கிடுதல், பாதுகாப்பு, வேலை ஆகிய போன்றவைகளை அனைத்து தள மக்களுக்கும் கிடைக்கும்படி செய்தால் கூலிக்கு மாரடிக்கும் கும்பல்களை ஒழிக்கலாம். இதைச் செய்தால் இவர்களை நம்பி இருக்கும் கொள்ளைக் கூட்டங்களையும் ஒழிக்கலாம்.

-o❢o-

b r e a k i n g   n e w s...