.

Sunday, May 6, 2007

ச: உலகின் பெரிய பயணிகள் விமானம் A380 இந்தியா வந்தது !

இந்திய வான்வெளி வரலாற்றில் முதல்முறையாக உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் A380 தில்லியின் இந்திராகாந்தி பன்னாட்டு விமானதாவளத்தில் தரையிறங்கியது. இரண்டு தட்டுகளில் 850 பேர் வரை பயணிக்கக் கூடிய இந்த விமானம் கிங்பிஷர் ஏர்லைன்ஸின் இரண்டாம் வருட கொண்டாட்டங்களின் அங்கமாக இன்று காலை இந்திய நேரம் 10.50க்கு பிரான்ஸின் துலூஸிலிருந்து வந்திறங்கியதைப் பார்க்க பெரும் கூட்டம் கூடியிருந்தது. விமானநிலையத்தின் அண்மையில் செல்லும் NH 8 சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.


Airbus 380's maiden trip to India - Deccan Herald - Internet Edition

2 comments:

VinisPearls said...

A380 விமானம் டில்லி மற்றும் மும்பை விமான நிலயஙகளில் மட்டுமே தரை இறஙக முடியும். இது தவிர கொச்சின் விமான நிலயத்தில் இறஙகாலம்.

சென்னைக்கு வர சுமார் எவ்வளவு வருடஙக்கள் ஆகும் என்று வலைபதிவர்கள் கூற முடியுமா?

உண்மைத்தமிழன் said...

ரவி பாலச்சந்திரன் அவர்களே..

இந்தக் கேள்வியை நீங்கள், மாட்சிமை தாங்கிய மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி என்ற டாக்டர் ராமதாஸ் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்..

அவருடைய அனுமதியில்லாமல் சென்னை விமான நிலையம் விரிவாக்கப்பட மாட்டாது. விரிவாக்கப்பட்டால்தான் இந்த விமானம் சென்னையில் இறங்க முடியும்..

எதுக்கும் டாக்டருக்கு ஒரு கடுதாசியோ அல்லாட்டி போனோ போட்டுக் கேட்டுட்டு என்ன பதில் சொன்னாருன்றதையும் எங்களுக்குச் சொன்னீங்கன்னா ரொம்ப பிரயோசனமா இருக்கும்.. ))))))))))))))))))))

-o❢o-

b r e a k i n g   n e w s...