மங்களூர் மாவட்டம் உல்லால் சட்டப் பேரவைத் தொகுதிக்கு சனிக்கிழமை இடைத்தேர்தல் நடந்தது. இத்தொகுதியில் யூ.டி.காதர் (காங்கிரஸ்), சந்திரசேகர உசில் (பாஜக), அபுபக்கர் நடேகல் (மதச்சார்பற்ற ஜனதா தளம்), பாலகிருஷ்ண ஷெட்டி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) மற்றும் பரத்ராஜ் ஷெட்டி (சுயேச்சை) ஆகியோர் போட்டியிட்டனர்.
சுயேச்சை வேட்பாளர் பரத்ராஜ் ஷெட்டியைத் தவிர மற்ற நான்கு வேட்பாளர்களும் இத் தொகுதியில் வாக்களித்தனர். பரத்ராஜ் ஷெட்டிக்கு இத் தொகுதியில் வாக்கு இல்லை.
வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்துச் செல்லக் கூடாது என்ற உத்தரவு இருந்தும் காதர் செல்போன் எடுத்துச் சென்றதற்கு ஆட்சேபம் தெரிவித்து ஏராளமானோர் அந்த வாக்குச்சாடி முன் கூடி, அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி குரல் எழுப்பினர்.
இத்தொகுதியில் பதிவான வாக்குகள் ஜூன் 5-ம் தேதி எண்ணப்படுகின்றன.
Dinamani.com
Sunday, June 3, 2007
இடைத்தேர்தல்: உல்லால் தொகுதியில் 62% வாக்குப்பதிவு
Posted by
Boston Bala
at
8:29 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment