.

Saturday, July 21, 2007

குடியரசுத் தலைவர் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை ஆரம்பம்

புதுதில்லியில் இன்று காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பதிவான வாக்குகள் எண்ணப் பட ஆரம்பித்தது. பெரும்பான்மை வாக்கு எண்ணிக்கை பெற்று பிரதீபா பாடில் வெல்வது உறுதி என ஆளும் கூட்டணி நம்புகிறது. இந்தியக் குடியரசின் முதல் பெண் தலைவராக பாடில் தேர்ந்தெடுக்கப்படும் சரித்திர நாளாக இன்று அமையுமா ?

தேர்தல் அதிகாரி பிடிடி ஆச்சாரி ஆளும் கூட்டணியின் பிரதிநிதி மத்திய அமைச்சர் தாஸ்முன்ஷி மற்றும் ஷேகாவத்தின் சார்பில் சத்யபால் சிங் இவர்கள் முன் முதல் வாக்குப்பெட்டியை திறந்து எண்ணிக்கையை ஆரம்பித்தார். எண்ணிக்கையின் முடிவு மதியம் இரண்டுமணிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. 682 எம்பிகளும் 3755 எம் எல் ஏக்களும் வாக்களித்துள்ளனர்.

Counting of votes for Prez poll begins

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...