.

Saturday, July 21, 2007

பாகிஸ்தானின் பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை நீதிபதியை மீண்டும் பதவியில் அமர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

பாகிஸ்தானில் தனது பதவியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட தலைமை நீதிபதியான இவ்திஹார் சௌத்ரி அவர்களை மீண்டும் பதவியில் அமர்த்துவது என்று அந்த நாட்டின் உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.

அதிபர் முஷாரப்பின் உத்தரவுகளின் பேரில், கடந்த மார்ச் மாதத்தில் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவரது பணி நீக்கம் சட்டவிரோதமானது என்று கூறிய நீதிமன்றம், அவர் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நிராகரித்தது. தாம் இந்த தீர்ப்பை மதிப்போம் என்று அரசாங்க அமைச்சர் ஒருவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்துக்கு வெளியே சௌத்ரி அவர்களின் ஆதரவாளர்கள் இந்தத் தீர்ப்பைக் கொண்டாடியதையும் காணக்கூடியதாக இருந்தது. செளத்ரியை பதவி நீக்கம் செய்ததானது, அதிபர் முஷாரப்பை இரண்டாவது ஆட்சிக்காலம் ஒன்றுக்கு மீண்டும் தேர்ந்தெடுப்பது, அவரே இராணுவத்தின் தலைவராகவும் தொடருவது ஆகியவற்றுக்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று அவரது ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள்.

வீடியோ: BBC Tamil

The Hindu News :: Aziz says Govt. accepts Pak SC verdict reinstating suspended CJ
BBC NEWS | South Asia | Pakistan's top judge reinstated

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...