.

Sunday, August 26, 2007

ஒரிசாவில் காலரா - 48பேர் பலி

ஒரிசாவின் காலராவிற்கு 48பேர் பலியாகியுள்ளனர். ரயகடா மாவட்டத்தில் 50பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள செய்தித் தாள்கள் கடந்த சில வாரங்களில் 250பேர் இறந்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியிட்டுள்ளன.

ஆயிரக் கணக்கானோர் காலராவினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 10நிமடங்களுக்கு ஒருவர் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதாகவும் சம்பட் எனும் செய்தித் தாள் தெரிவிக்கிறது. ஆனால் மருத்துவ அதிகாரி சீத்தாராம் இதை மறுத்துள்ளார். மாவட்டத்தின் 26 கிராமங்களில் 48 பேர் இதுவரை இறந்துள்ளதாகவும் இதில் 16 கிராமங்களை அவர்கள் அணுக இயலவில்லை(inaccessible) என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மத்திய வெள்ளப் பெருக்கில் குடிநீர் ஆதாரங்கலில் காலரா கிருமிகள் பரவியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

இறப்பு எண்ணிக்கையை பல்வேறு நாளிதழ்களும் பல்வேறு விதமாய் வெளியிட்டுவருகின்றன.

48 dead in Orissa cholera outbreak Hindustan Times, India
70 die as cholera breaks out in parts of Orissa Times of India, India
80 die of cholera in Orissa Hindu, India
Cholera outbreak kills 58 tribals in Orissa Reuters India, India

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...